Saturday, January 30, 2010
ஆப்பிளின் ஐபேட்; புதிய தகவல்கள்
ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய சாதனாமான ஐபேடை அதன் தலைமை அதிகாரி ஸ்டீவ் ஜாப்ஸ் இப்படி தான் வர்ணித்துள்ளார்.இது மாயத்தன்மை மிக்க புரட்சிகரமான தாயாரிப்பு என்றும் புகழ்ந்து தள்ளியுள்ளார் ஜாப்ஸ். ஐபேட் பெயரே அசத்தாலாக தான் உள்ளது.
ஐபாட் மற்றும் ஐபோன் ஆகியவற்றின் தொடர்ச்சியாக ஆப்பிள் அறிமுகம் செய்துள்ள புதிய சாதனம் இது.பெரும் எதிர்பார்ப்பு மற்றும் பரப்புக்கு இடையே இந்த சாதன்ம் அறிமுகமாகியுள்ளது.
பொதுவாகவே ஆப்பிளின் புதிய அறிமுகம் என்றாலே ஒரு மிதமிஞ்சிய எதிரபார்ப்பு இருக்கத்தான் செய்யும்.சில ஆண்டுகளூக்கு முன் ஐபோன் அறிமுகமான போது திருவிழாவிக்கு நிகரான் கோலகல நிகழ்வாக அமைந்தது.
ஐபோட் வெற்றியை தொடர்ந்து ஆப்பிள் செல்போன் சந்தையிலும் நுழையலாம் என்று ஆருடம் கூறப்பட்டு வந்த நிலையில் ஆப்பிள் ஐபோனை களமிறக்கி அசத்தியது. ஐபோனின் வெற்றி இன்று மாபெரும் தொழில்நுட்ப சகாப்தமாக திகழ்கிறது.ஐபோனின் வருகை செல்போன் சந்தையையே மாற்றி அமைத்து விட்டது.
இந்த பின்னனியில் தான் கொஞ்ச காலமாகவே ஆப்பிள் புதியதொரு சாஅதனத்தை அறிமுகம் செய்ய உத்தேசித்திருப்பதாக செய்திகள் வெளியாயின.நம்மூரில் நட்சத்திரங்களின் காதல் கதை பற்றிய அனுமானங்களை வெளியிடும் உற்சாகத்தோடு ஆப்பிளின் புதிய சாதன்ம் பற்றி ரகசிய தகவல்களும் யூகங்களும் வெளியாகி வந்தன.
இதனிடையே ஆப்பிள் 27 ம் தேதி இந்த சாதனம் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்த நிலையில் இந்த யூகங்கள் வலுப்பெற்றன.புதிய வகை டேப்லர் கம்ப்யூட்டராக இது இருக்கும் என்பதை பெரும்பாலான யூகங்கள் உறுதி செய்தன.
இந்த டேப்லெட் கம்ப்யூட்டர் ஈ புக் வசதி கொன்டதாக இருக்கும்,வீடியோ கேம் மற்றும் செயலிகளில் புதிய பாய்ச்சலாக அமையும் என்றெல்லாம் பேசப்பட்டது. அதைவிட முக்கியமாக நாளிதழ்கள் மாறு பத்திரிக்கைகளுக்கான புதிய வழியாகவும் விளங்கும் என்றும் கணிக்கப்பட்டது.
இந்நிலையில் ஆப்பிள் வழக்கப்படி அதன் நட்சத்திர தலைமை அதிகாரியான ஸ்டீவ் ஜாப்ஸ் பரப்புக்கு ஈடுகொடுக்கும் வகையில் புதிய சாதனாமான ஐபேடை அறிமுகம் செய்துள்ளார். ஐபேட் டேப்லெட் வகையை சேர்ந்ததாக அமைந்துள்ளது.
ஐபோனை விட சற்றே பெரிதாக இருந்தாலும் தோற்றத்திலும் வடிவமைப்பிலும் அதனை ஒத்திருக்கிறது.அரை இன்ச் அகலம் கொண்ட ஐபேட் லேப்டாப்பை விட எடை குறைந்ததாக உள்ளது.வை பீ ம்ற்றும் ப்ளுடூத் வசதி கோன்டுள்ளது. அதன் சிறப்பம்சம் என்று பார்த்தால் பத்து மணி நீடிக்க கூடிய பேட்டரி,அழகான தொடு திரை,ஐபுக் என்னும் புத்தக வாசிப்பு வசதி என அடுக்கி கொண்டே போகலாம்.
இதில் வீடியோ கேம் ஆடலாம். ப்டம் பார்க்கலாம். விடியோ கேமை பொருத்தவரை வேகத்தை கூட்டும் வசதி கூடுதலாக உள்ளது.படம் பார்க்க ஏற்ற பெரிய திரை கூடுதல் சிறப்பமசம். புததக வசதியை பொருத்தவரை புத்தக அலமாரி போன்ற அமைப்பிலிருந்து புத்தகத்தை உருவும் வசதியும் பக்கங்களை தொட்டு திருப்பும் வசதியும் குறிப்பிடத்தக்கது,
எல்லாவற்றையும் விட ஆச்சர்யம் இதன் விலை தான். ஆயிரம் டாலராவது இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில் 499 டால்ர் முதல் கிடைக்க உள்ளது.
பிடிஎஃப் கோப்புகளை விடுவிப்பது எப்படி?
என்னைப்பொருத்தவரை சில நேரங்களில் நான் பிடிஎஃப் ஆதரவாளர்.சில நேரங்களில் பிடிஎஃப் விரோதி.
பிடிஎஃப் என்பது ஒரு கோப்பு வடிவம்.ஆவனங்களை பரிமாரிக்கொள்ள அடோப் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது.துவக்கத்தில் பிடிஎஃப் கோப்புகளை உருவாக்குவதும் அவற்றை வாசிப்பதும் கடினமாக இருந்தது. இதற்கு அடோப் மென்பொருள் தேவை.இதனால் இண்டெர்நெட்டில் பிடிஎஃப் கோப்புகளை அனுப்புவதும் பெறுவதும் சிக்கலானதாக இருந்தது.
ஆனால் பிறகு அடோப் இறங்கி வந்து பிடிஎஃப் கோப்புகளை வாசிப்பதற்கான ரீடர் மென்பொருள் கிடைப்பதை சுலபமாக்கியது.கடந்த ஆண்டு இது ஒபன் சோர்ஸ் முறைக்கு கொண்டு வரப்பட்டது.
இதெல்லாம் தொழில்நுட்ப விவரங்கள்.விஷயம் என்னவென்றால் பிடிஎஃப் கோப்புகள் குறிப்பிட்ட இடங்களில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.உதாரணத்திற்கு தமிழில் ஒரு செய்தியை அனுப்பும் போது பிடிஎஃப் கோப்பாக மாற்றும் பட்சத்தில் எழுத்துரு பிரச்ச்னை எழாது.அதனை அப்படியே திறந்து வாசிக்கலாம்.
இதே போல செய்தி மடல் போன்றவற்றை அனுப்ப இந்த வடிவமே ஏற்றது.வாழ்த்து அட்டை மற்றும் அழைப்பிதழ்களுக்கும் இது பொருந்தும்.இந்த காரணங்களினால் நான் பிடிஎஃப் ரசிகன்.
ஆனால் சில நேரங்களில் பிடிஎஃப் பொருமையை சோதித்துவிடும்.உதாரணத்திறகு தகவல்களை தேடிக்கொண்டிருக்கும் போது பிடிஎஃப் கோப்புகள் வந்து நின்றால் சிக்கலாகிவிடும்.சாதரண வடிவிலான் கோப்பாக இருந்தால் உடனே காபி செய்து கொள்ளலாம்.அல்லது சுலபமாக பிரிண்ட் கொடுத்துவிடலாம்.பிடிஎஃப் கோப்பு என்றால் இதெல்லாம் சாத்தியமில்லை.
அதோடு அடோப்பின் சமிபத்திய மென்பொருளை கொண்டு உருவாக்கப்பட்ட கோப்பாக இருக்குமானால் நம்மிடம் இருக்கும் பழைய அடோப் ரீடர் மென்பொருளை கொண்டு அதனை வாசிக்க இயலாது.இது போன்ற காரணங்களினால் எனக்கு பிடிஎஃப் கோப்புகளை பிடிக்காது.
நிற்க என் விருப்பு வெறுப்பு பற்றியதல்ல இந்த பதிவு.இத்தகைய சிக்கல்கலை மீறி பிடிஎஃப் கோப்புகளை பயன்படுத்துவதற்கான இணையதளம் பற்றி அறிமுகம் செய்யவே இந்த பதிவு.
ஃபிரிமைபிடிஎஃப் என்னும் பெயரிலான அந்த தளம் பெயருக்கு ஏற்பவே பிடிஎஃப் கோப்புகளை விடுவித்து தருகிறது.
நீங்கள் பயன்படுத்த விரும்பும் பிடிஎஃப் கோப்பு அலது பயன்படுத்த முடியாமல் தடுமாறிக்கொண்டிருக்கும் பிடிஎஃப் கோப்பை இங்கு சமர்பித்தால் அந்த கோப்பில் உள்ள பூட்டுகளை எல்லாம் நீக்கி சுலபமாக வாசிக்க மற்றும் அச்சிட வசதி செய்து தருகிறது.
பிடிஎஃப் கோப்புகளை அடிக்கடி எதிர்கொள்பவர்களுக்கு பயனுள்ள தளம் இது.
—-
link;http://freemypdf.com/
இணையதளங்களை பி டி எப் கோப்பாக மாற்ற..
வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும் ,ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும் என்று சொல்வது போல இணையத்தைப்பொருத்தவரை பி டி எப் கோப்புகளை சாதாரண கோப்பாக மாற்ற வேண்டிய தேவையும் வரலாம்.சாதாரண கோப்புகளை பி டி எப் வடிவில் மாற்ற வேண்டிய தேவையும் வரலாம்.
குறிப்பிட்ட ஒரு கோப்பை பி டி எப் கோப்பாக மாற்றும் வசதியை தரும் தளங்கள் இருக்கவே செய்கின்றன.அந்த வகையில் புதிய அறிமுகமாக பி டி எப் மை யூ ஆர் எல் தளத்தை சேர்த்துக்கொள்ளலாம்.
இந்த தலத்தில் என்ன விஷேசம் என்றால் நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் எந்த ஒரு இணையதளத்தையும் பி டி எஃப் வடிவில் மாற்றிக்கொள்ளலாம். இணையமுகவரியை இந்த தளத்தில் சமர்பித்தால் போதும் அத்னை பி டி எஃப் வடிவில் சுலபாமாக மாற்றித்தந்து விடுகிறது.
சில தகவல்களை அப்புறம் படிக்கலாம் என்று இணைய பக்கமாக சேமித்து வைப்பீர்கள் அல்லவா? அத்தகைய தகவல்களை அப்படியே பி டி எஃப் பக்கமாக மாற்றிகொண்டால் இணைடெர்நெட் இணைப்பு இல்லாத நிலையில் படிப்பது மிகவும் சுலபம்.
அதே போல் ஆவனப்படுத்த விரும்பும் தளங்களையும் இப்படி மாற்றிக்கொள்ளலாம்.
மேலும் இ புக் ரீடர் சாதனம் வைத்திருப்பவர்கள் பி டி எஃப் வடிவில் கட்டுரைகளை படிக்க முடியும்.
--------
http://www.pdfmyurl.com/
----------
மாற்று இன்டெர்நெட்
அதன் பிறகு இ-மெயில் அனுப்புவதி லிருந்து புதிய தகவல்களை பதிவேற்றுவது வரை அனைத்துக்கும் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். விருப்பப்பட்டால் இந்த சேவைக்குள் நமக்கு என்று தனியே ஒரு வலைப் பின்னலையும் அமைத்துக் கொள்ளலாம். வர்த்தக நிறுவனங் களுக்கு இது பேருதவியாக இருக்கும். பியர் டு பியர் என்று சொல்லப்படும் தொழில் நுட்பத்தின் அடிப்படையில் செயல்படுவதால் இந்த சேவைக்குள் வைரசோ வீணான இ-மெயில்களோ நுழைய வாய்ப்பில்லை என்று நெட் ஆல்டர் சொல்கிறது.
தற்போது புழக்கத்தில் இருக்கும் இன்டெர்நெட் பல்வேறு வகையான தாக்குதல்களுக்கும், வைரஸ்களுக் கும் இதர மோசடிகளுக்கும் இலக்காகி வருவதால் இத்தகைய மாற்று இன்டெர் நெட்டுக்கான தேவை உண்டாகியிருக்கிறது.இன்டெர்நெட் பயன்படுத்தும் விதத்தை முற்றிலுமாக மாற்றி அமைக்கக்கூடிய வழி என்று நெட் ஆல்டர் இதனை வர்ணிக்கிறது. ஆனால் நடைமுறையில் இது எந்த அளவுக்கு சாத்தியமாகும் என்பதை பயன்படுத்தி பார்த்தால் மட்டுமே தெரியும்.
————–
link;http://www.netalter.com/Index.html
ஓஷோ
அவர் பல்கலைக்கழகத்திலே படிச்சு கிட்டிருந்தபோது மாணவர்களுக்கான சாரணர் அணியிலே சேர்ந்திருந்தார். பயிற்சி கொடுக்கிறபோது சார்ஜன்ட், “லெப்ட் டேர்ன் ரைட் டேர்ன்” அப்படீன்னு சொல்லுவார். எல்லா மாணவர்களும் திரும்புவாங்க. ஓஷோ திரும்பமாட்டார்.
சார்ஜண்ட் வந்து கேட்பார் “ஏன்? காதிலே ஏதும் கோளாறா” அப்படீன்னு. ஓஷோ சொன்னார், “காதிலே எந்தக் கோளாறும் இல்லை. இடது பக்கமோ வலது பக்கமோ எதுக்காகத் திரும்ப னும்ணு யோசிச்சேன், அதனால திரும்பலை” அப்படீன்னு.
நான் பொதுவாச்சொல்றேன், ஒரு சிந்தனையாளர் – எதிர் காலத்திலே ஞானியாக மலரப் போகிறவர் – சாரணப் பயிற்சியிலே வெற்றி பெறலை. அவருக்குப் பொருந்தாத துறையிலே சாதிக்கணும்னு அவர் நினைக்கலை.
இன்னைக்கு என்ன நடக்குது? ஏதாவது ஒரு துறையிலே முயற்சி செய்து தன்னால அதில் ஈடுபட முடியாதபோது, ஒண்ணு, மன உறுதியோடு மறுபடியும் முயற்சி செய்து ஜெயிக்கலாம். இல்லை, மனசு ஒத்து “இது நம்ம துறை இல்லை”, அப்படீன்னு முடிவு பண்ணி நகர்ந்துடலாம்.
ஆனா, சிறிசா ஏற்படற தோல்வியை ரொம்பப் பெரிசா எடுத்துட்டு, நாம எதுக்குமே பொருந்தவில்லை போலிருக்கு அப்படீன்னு பலபேர் நினைச்சுடறாங்க?
நான் பொதுவாச் சொல்றேன், ஒரு விஞ்ஞானி கவிஞராக முயற்சி செய்தால் அந்தப் பரிசோதனை தோல்வியிலே முடியும். ஒரு கவிஞன் விஞ்ஞானியாக முயற்சி செய்தால் அதுவும் பாதியிலே திசை திருப்பும். (அப்படி ஒரு கவிஞர் பாதியிலே விஞ்ஞானப் படிப்பை விட்டு வெளியேறி, பிறகு தமிழ் படிச்சு இப்ப ரொம்பப் பிரபலமா இருக்கார். யார்னு சரியா எழுதற முதல் மூன்று வாசகர் களுக்கு, அந்தக் கவிஞருடைய புத்தகம் பரிசாக அனுப்பப்படும்)
அதனாலே, எல்லோரும் எல்லாமும் ஆக முயற்சி செய்யாம, தங்கள் தனித்தன்மை என்னான்னு தெரிஞ்சு அந்தத் துறையிலே சிறந்து செயல்பட எல்லா முயற்சியும் எடுத்துக்கணும்.
“எல்லாருக்கும் ஒவ்வொன்று எளிது” அப்படீன்னு ஒரு பழைய பாட்டு இருக்கு.
நான் பொதுவாச் சொல்றேன், நாம் எதை விரும்ப றோமோ அதை ரசிச்சு செய்கிறபோது அந்த வேலை ஒரு சுமையாத் தெரியாது. சுகமாத் தெரியும். அதை விட்டுவிட்டு, வராத துறையிலே முயற்சி செய்து தன்னைத் தானே எதற்கும் உதவாத ஆள்னு முடிவு செய்யறது ரொம்ப தப்பு.
நம்ம வாழ்க்கையிலே நடக்கிற சம்பவங்கள் ஒவ்வொண்ணும் மறந்து போறதுக்காக இல்லை. திரும்பத் திரும்ப நினைச்சுப் பார்த்து, அதிலே பயன்படக் கூடிய விஷயங்களை மத்தவங்களுக்கு சொல்றதுக்காகத்தான்.
ஓஷோவைப் பற்றி ஆரம்பத்திலே சொன்னேன். அவர் மகாத்மா காந்தியடிகளைப் பல இடங்களிலே மிகக் கடுமையா விமர்சனம் செய்திருக்கார் ஆனா, காந்தியடிகளுடைய சுயசரிதையைப்பற்றிச் சொல்கிறபோது. “இவ்வளவு வெளிப்படையா, தன்னைப் பற்றித் தானே விஞ்ஞானப்பூர்வமா ஆய்வு செய்து எழுதறது ரொம்ப கஷ்டம்” என்கிறார் ஓஷோ.
நான் பொதுவாச் சொல்றேன், எல்லா விஷயங்களைப் பற்றியும் நாம சரியா கருத்துச் சொல்வோம். நம்மைப் பற்றி தெளிவாக இருக்கறோமா? “என்னைப் பற்றி என்ன நினைக்கிறீங்க” அப்படீன்னு அடுத்தவர்களைக் கேட்போம் இது தேவையில்லை.
நம் பலங்களைப் புரிஞ்சுக்கறதும் நம் பலவீனங்களைப் புரிஞ்சுக்கறதும் தான் உண்மையிலேயே நம்மைப் புரிஞ்சுக்கறது!
நம்மை உணர்வதே உண்மையை உணர்வது
உண்மையை உணர்வதே உயர்வுகள் தருவது.
உறவுகள்.. உணர்வுகள்…
வேறென்ன? அதீத எதிர்பார்ப்பு தான் காரணம்.
வலுவான உறவுப் பாலத்தில் கூட விரிசலை ஏற்படுத்திவிடும் சக்தி இந்த அதீத எதிர்பார்ப்புக்கு உண்டு. தாய்- குழந்தை, நண்பர்கள், கணவன்-மனைவி என இந்த எதிர்பார்ப்பு இல்லாத உறவு முறைகளே இல்லை.
உணர்வுகளையும் மீறி நமக்கு நாமே போட்டுக் கொள்ளும் சில முகமூடி களை கொஞ்சம் விலக்கிப் பார்த்தால் சில உண்மை களை உணரமுடியும்.
“என்னோட அம்மா அப்ப எல்லாம் என்கிட்ட யிருந்து ஒரு துளி பிரதி பலனைக் கூட எதிர்பார்க் கலைப்பா. இதுவரைக்கும் எல்லாமே அவங்கதான் எனக்கு செஞ்சிருக்காங்க….” – இப்படி சொல்லும் போது சம்பந்தப்பட்ட வரின் முகத்தில் பெருமிதம் பொங்கும். உலகில் பலருக் கும் கிடைக்காத ஒரு அதிர்ஷ்டம், வரப்பிரசாதம் நமக்கு கிடைத்திருக்கிறது என்ற சந்தோஷத்தின் வெளிப்பாடுதான் இது.
இதற்கு நேர்மாறாக, முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு, குரலில் விரக்தி தோய்ந்திருக்க, “சே, என்னடா வாழ்க்கை இது. இந்த அன்பு, பாசம், காதல் எல்லாமே பொய். நம்மால ஏதாவது பிரயோஜனம் இருந்தாதான் உறவுகள் தேடிவரும். பணம், காசு, குறைந்தபட்சம் உடலுழைப்பு…. இப்படி ஏதாவது ஒரு பயனை எதிர்பார்த்துதான் எல்லாரும் சுத்தி வர்றாங்க. இது எதுவுமே இல்லாத நிலைமைல நாம இருந்தா தாயாவது, மனைவியாவது… ஒரு நாய்கூட திரும்பி பார்க்காது.”
“மனுஷங்க எல்லாருமே சுயநலத்தின் சிகரங்கள்தான். நமக்கு காரியம் ஆகனும். மத்தவங்க என்ன ஆனாலும் சரி…. இந்த மனோபாவம் தான் எல்லார்கிட்டேயும் இருக்கு. எவ்வளவு முடியுமோ அவ்வளவு சக்கையா அடுத்த வங்களைப் பிழிஞ்சிட்டு, தன் காரியம் முடிந்ததும் கருவேப்பிலையைத் தூக்கி எறியற மாதிரி ஒரு ஓரமா தூக்கி கடாசிடுவாங்க….”
இந்த புலம்பல்களை மேலோட்டமாகக் கேட்டுவிட்டு ஒதுக்கித் தள்ளிவிடாமல், கொஞ்சம் ஆழமாகப் பார்த்தால் இதற்கு அடிப்படைக் காரணம் அதீத எதிர்பார்ப்புதான் என்பது புரியும்.
“மனிதர்கள் அனைவரும் ஏதோ ஒன்றை எதிர்பார்த்துதான் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கிறார்கள்…. ஒவ்வொரு வார்த்தை யையும் பேசுகிறார்கள்…. “எனப் புலம்புபவரும் ஒரு விஷயத்தை எதிர்பார்க்கிறார் அல்லவா? மற்றவர்கள் தன்னிடமிருந்து எதையும் எதிர்பார்க்கக்கூடாது என்று ஆசைப்படுவதும் எதிர்பார்ப்புதானே….?
மனிதர்களின் மனநிலையை உளவியல் ரீதியாக மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
1). குழந்தைகள் மனநிலை 2). இளையோர் மனநிலை 3) முதியோர் மனநிலை. இது நம் அனைவருக்கும் தெரிந்ததுதான்.
வாழ்வின் பெரும்பாலான சமயங்களில் முதல் இரண்டு மனோநிலைகளில்தான் இருக்கிறோம். அறுபது வயதான பெரியவர்கூட ஏதோ ஒரு சில கணங்களில் மட்டும்தான் முதியோர் மன நிலையிலிருக்கிறார். எவ்வளவு வயதானாலும் குழந்தை மனநிலையில் இருக்கவே நாம் விரும்புகிறோம்.
அனைவரது கவனத்தையும் கவரவேண்டும் என்பதற்காகவே சதா அழுது கொண்டிருக்கும் குழந்தைகளைப் பார்த்திருப்போம். எப்போதும் நம்மை மற்றவர்கள் கவனித்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதற்காகவே சத்தமாக பேசி சிரிப்பது, தன் இருப்பை வெளிப்படுத்திக் கொள்வது போன்ற செயல்களில் ஈடுபடும் டீன் ஏஜினரைப் பார்த்திருப்போம்.
குழந்தை மனநிலையிலிருக்கும் நாம் மற்றவர்கள் எப்போதும் நம்மேல் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்.
காய்ச்சலில் உதடு காய்ந்து, வாய் கசந்து, வாய்க்குப் பிடித்த உணவை சாப்பிடக்கூட முடியாத நிலையில் சுருண்டு கிடந்தாலும், “இன்னொரு முறை காய்ச்சல் வரக்கூடாதா…” என்று மனதிற்குள் ஏங்குவோம். உண்மைதானே?
காரணம், “ஒரு டம்ளர் கஞ்சியாவது குடிப்பா. கொஞ்சம் ஜுஸ் மட்டும் குடிச்சிக்க….” என ஒரு கையில் மாத்திரையும் இன்னொரு கையில் பாலையும் ஏந்திக்கொண்டு வரும் தாயையும், தங்கையையும் பார்க்கையில், நம்மேல் இவ்வளவு கரிசனமா என்ற மகிழ்ச்சியில் உதட்டோரம் ஒரு சிரிப்பு நெளியுமே, அதற்காகத்தான்.
ஆக, ஏதோ ஒரு விதத்தில் மற்றவர்களின் அன்பும் ஆதரவும் நம்மேல் பொழியப்படுவதில் மெய்சிலிர்த்துப் போகிறோம்.
இப்படியிருக்க, அடுத்தவர்களின் எதிர் பார்ப்பை மட்டும் ஏன் குறை சொல்ல வேண்டும். காசோ, பணமோ, அன்போ, ஆசையோ, அக்கறையோ, கரிசனமோ…. எதுவாக வேண்டு மானாலும் இருக்கட்டுமே. அவர்கள் எதிர்பார்ப் பதில் என்ன தவறிருக்கிறது?
நம்மை மற்றவர்கள் தாங்கிக் கொள்ள வேண்டும் அரவணைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு இருப்பதைப் போல அவருக்கும் இருக்காதா?
மற்ற உறவுகளைவிட கணவன்-மனைவிக்கு நெருக்கம் எப்படி அதிகமோ அதே அளவிற்கு இந்த உணர்வு பிறழ்வுகளும் அதிகம். தன்னுடைய வாழ்க்கைத் துணை தன்னை உள்ளங்கையில் வைத்து தாங்க வேண்டும் என்ற ஆசை ஒவ்வொருவரின் மனதையும் ஆட்டிப்படைக்கும்.
“என் மனைவி என்னை ஒரு வேலை செய்ய விடக்கூடாது. எனக்கு பார்த்து பார்த்து சமைச்சுப் போடனும். என்னை எதிர்த்து ஒரு வார்த்தை பேசக்கூடாது. என் துணியெல்லாம் துவைச்சு, அயர்ன் பண்ணி முதல் நாளே மடிச்சு வெச்சிருக்கனும். என்னை ஒரு குழந்தை மாதிரி பார்த்துக்கனும். காசு, பணத்தைப் பத்தியெல்லாம் அவ கவலைப்படத்தேவையில்லை. இருந்தாலும், குடும்ப பிரச்சனைகளை சமாளிக்க அவளும் கைகொடுக்க தயாராயிருக்கனும்…” இப்படி ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளையும், கனவுகளையும் சுமந்து கொண்டு திருமணத்திற்கு காத்திருக்கும் இளைஞர்களை தினம் தினம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.
இவர்களுக்கு ஒன்றே ஒன்றை மட்டும் தெளிவுபடுத்தினால் புண்ணியமாய்ப் போகும். இப்படி கனவுக் கோட்டைகளை சுமந்துகொண்டு இல்லறத்திற்குள் அடியெடுத்து வைக்காதீர்கள். மூன்று அடி உயரத்திலிருந்து விழுந்தால் இலேசாகத்தான் காயம்படும். தப்பித்து விடலாம்.
“ஆசையே அழிவிற்குக் காரணம்” – சரிதான். உறவுகள் சிதைந்து போவதற்கு…?
வேறென்ன? அதீத எதிர்பார்ப்பு தான் காரணம்.
வலுவான உறவுப் பாலத்தில் கூட விரிசலை ஏற்படுத்திவிடும் சக்தி இந்த அதீத எதிர்பார்ப்புக்கு உண்டு. தாய்- குழந்தை, நண்பர்கள், கணவன்-மனைவி என இந்த எதிர்பார்ப்பு இல்லாத உறவு முறைகளே இல்லை.
உணர்வுகளையும் மீறி நமக்கு நாமே போட்டுக் கொள்ளும் சில முகமூடி களை கொஞ்சம் விலக்கிப் பார்த்தால் சில உண்மை களை உணரமுடியும்.
“என்னோட அம்மா அப்ப எல்லாம் என்கிட்ட யிருந்து ஒரு துளி பிரதி பலனைக் கூட எதிர்பார்க் கலைப்பா. இதுவரைக்கும் எல்லாமே அவங்கதான் எனக்கு செஞ்சிருக்காங்க….” – இப்படி சொல்லும் போது சம்பந்தப்பட்ட வரின் முகத்தில் பெருமிதம் பொங்கும். உலகில் பலருக் கும் கிடைக்காத ஒரு அதிர்ஷ்டம், வரப்பிரசாதம் நமக்கு கிடைத்திருக்கிறது என்ற சந்தோஷத்தின் வெளிப்பாடுதான் இது.
இதற்கு நேர்மாறாக, முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு, குரலில் விரக்தி தோய்ந்திருக்க, “சே, என்னடா வாழ்க்கை இது. இந்த அன்பு, பாசம், காதல் எல்லாமே பொய். நம்மால ஏதாவது பிரயோஜனம் இருந்தாதான் உறவுகள் தேடிவரும். பணம், காசு, குறைந்தபட்சம் உடலுழைப்பு…. இப்படி ஏதாவது ஒரு பயனை எதிர்பார்த்துதான் எல்லாரும் சுத்தி வர்றாங்க. இது எதுவுமே இல்லாத நிலைமைல நாம இருந்தா தாயாவது, மனைவியாவது… ஒரு நாய்கூட திரும்பி பார்க்காது.”
“மனுஷங்க எல்லாருமே சுயநலத்தின் சிகரங்கள்தான். நமக்கு காரியம் ஆகனும். மத்தவங்க என்ன ஆனாலும் சரி…. இந்த மனோபாவம் தான் எல்லார்கிட்டேயும் இருக்கு. எவ்வளவு முடியுமோ அவ்வளவு சக்கையா அடுத்த வங்களைப் பிழிஞ்சிட்டு, தன் காரியம் முடிந்ததும் கருவேப்பிலையைத் தூக்கி எறியற மாதிரி ஒரு ஓரமா தூக்கி கடாசிடுவாங்க….”
இந்த புலம்பல்களை மேலோட்டமாகக் கேட்டுவிட்டு ஒதுக்கித் தள்ளிவிடாமல், கொஞ்சம் ஆழமாகப் பார்த்தால் இதற்கு அடிப்படைக் காரணம் அதீத எதிர்பார்ப்புதான் என்பது புரியும்.
“மனிதர்கள் அனைவரும் ஏதோ ஒன்றை எதிர்பார்த்துதான் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கிறார்கள்…. ஒவ்வொரு வார்த்தை யையும் பேசுகிறார்கள்…. “எனப் புலம்புபவரும் ஒரு விஷயத்தை எதிர்பார்க்கிறார் அல்லவா? மற்றவர்கள் தன்னிடமிருந்து எதையும் எதிர்பார்க்கக்கூடாது என்று ஆசைப்படுவதும் எதிர்பார்ப்புதானே….?
மனிதர்களின் மனநிலையை உளவியல் ரீதியாக மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
1). குழந்தைகள் மனநிலை 2). இளையோர் மனநிலை 3) முதியோர் மனநிலை. இது நம் அனைவருக்கும் தெரிந்ததுதான்.
வாழ்வின் பெரும்பாலான சமயங்களில் முதல் இரண்டு மனோநிலைகளில்தான் இருக்கிறோம். அறுபது வயதான பெரியவர்கூட ஏதோ ஒரு சில கணங்களில் மட்டும்தான் முதியோர் மன நிலையிலிருக்கிறார். எவ்வளவு வயதானாலும் குழந்தை மனநிலையில் இருக்கவே நாம் விரும்புகிறோம்.
அனைவரது கவனத்தையும் கவரவேண்டும் என்பதற்காகவே சதா அழுது கொண்டிருக்கும் குழந்தைகளைப் பார்த்திருப்போம். எப்போதும் நம்மை மற்றவர்கள் கவனித்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதற்காகவே சத்தமாக பேசி சிரிப்பது, தன் இருப்பை வெளிப்படுத்திக் கொள்வது போன்ற செயல்களில் ஈடுபடும் டீன் ஏஜினரைப் பார்த்திருப்போம்.
குழந்தை மனநிலையிலிருக்கும் நாம் மற்றவர்கள் எப்போதும் நம்மேல் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்.
காய்ச்சலில் உதடு காய்ந்து, வாய் கசந்து, வாய்க்குப் பிடித்த உணவை சாப்பிடக்கூட முடியாத நிலையில் சுருண்டு கிடந்தாலும், “இன்னொரு முறை காய்ச்சல் வரக்கூடாதா…” என்று மனதிற்குள் ஏங்குவோம். உண்மைதானே?
காரணம், “ஒரு டம்ளர் கஞ்சியாவது குடிப்பா. கொஞ்சம் ஜுஸ் மட்டும் குடிச்சிக்க….” என ஒரு கையில் மாத்திரையும் இன்னொரு கையில் பாலையும் ஏந்திக்கொண்டு வரும் தாயையும், தங்கையையும் பார்க்கையில், நம்மேல் இவ்வளவு கரிசனமா என்ற மகிழ்ச்சியில் உதட்டோரம் ஒரு சிரிப்பு நெளியுமே, அதற்காகத்தான்.
ஆக, ஏதோ ஒரு விதத்தில் மற்றவர்களின் அன்பும் ஆதரவும் நம்மேல் பொழியப்படுவதில் மெய்சிலிர்த்துப் போகிறோம்.
இப்படியிருக்க, அடுத்தவர்களின் எதிர் பார்ப்பை மட்டும் ஏன் குறை சொல்ல வேண்டும். காசோ, பணமோ, அன்போ, ஆசையோ, அக்கறையோ, கரிசனமோ…. எதுவாக வேண்டு மானாலும் இருக்கட்டுமே. அவர்கள் எதிர்பார்ப் பதில் என்ன தவறிருக்கிறது?
நம்மை மற்றவர்கள் தாங்கிக் கொள்ள வேண்டும் அரவணைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு இருப்பதைப் போல அவருக்கும் இருக்காதா?
மற்ற உறவுகளைவிட கணவன்-மனைவிக்கு நெருக்கம் எப்படி அதிகமோ அதே அளவிற்கு இந்த உணர்வு பிறழ்வுகளும் அதிகம். தன்னுடைய வாழ்க்கைத் துணை தன்னை உள்ளங்கையில் வைத்து தாங்க வேண்டும் என்ற ஆசை ஒவ்வொருவரின் மனதையும் ஆட்டிப்படைக்கும்.
“என் மனைவி என்னை ஒரு வேலை செய்ய விடக்கூடாது. எனக்கு பார்த்து பார்த்து சமைச்சுப் போடனும். என்னை எதிர்த்து ஒரு வார்த்தை பேசக்கூடாது. என் துணியெல்லாம் துவைச்சு, அயர்ன் பண்ணி முதல் நாளே மடிச்சு வெச்சிருக்கனும். என்னை ஒரு குழந்தை மாதிரி பார்த்துக்கனும். காசு, பணத்தைப் பத்தியெல்லாம் அவ கவலைப்படத்தேவையில்லை. இருந்தாலும், குடும்ப பிரச்சனைகளை சமாளிக்க அவளும் கைகொடுக்க தயாராயிருக்கனும்…” இப்படி ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளையும், கனவுகளையும் சுமந்து கொண்டு திருமணத்திற்கு காத்திருக்கும் இளைஞர்களை தினம் தினம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.
இவர்களுக்கு ஒன்றே ஒன்றை மட்டும் தெளிவுபடுத்தினால் புண்ணியமாய்ப் போகும். இப்படி கனவுக் கோட்டைகளை சுமந்துகொண்டு இல்லறத்திற்குள் அடியெடுத்து வைக்காதீர்கள். மூன்று அடி உயரத்திலிருந்து விழுந்தால் இலேசாகத்தான் காயம்படும். தப்பித்து விடலாம்.
பல நூறு அடி உயரத்திலிருந்து விழுந்தால் ஒரு எலும்புகூட மிஞ்சாது. சரிதானே?
“பெண் என்பவள் பாசத்தின் ஊற்று, சதா அன்பைப் பொழியும் தாயுள்ளம் படைத்தவள்” என்று உங்களுக்கு வசதியாய் நீங்களே பல கருத்துக்களை உருவாக்கிக்கொள்ளாதீர்கள். மனதில், ஆண் மனம் பெண் மனம் என்று பாகுபாடில்லை. சமூக, குடும்ப சூழ்நிலை காரணமாய், பழக்க வழக்கத்தினால் இயல்பாகவே பெரும்பாலான கடமைகளை, பெண் பூர்த்தி செய்து விடுகிறாள்.
ஆணிடமிருந்து அவள் எதிர்பார்ப்பது உணர்வுப்பூர்வமான நெருக்கத்தையும், கொஞ்சம் கரிசனத்தையும் தான். அந்த கடமையை தட்டிக் கழிக்காமல், உள்ளார்ந்த அன்போடும், அக்கறையோடும் அவளை அரவணைத்துக் கொள்ளுங்கள்.
கணவன்-மனைவி, நண்பர்கள், தாய்-சேய் என உறவு எதுவானாலும் பெறுவதில் மட்டுமல்ல, கொடுப்பதிலும் ஒரு சுகம் உண்டு. அன்பை வாரி வழங்குவபவர்களாக மாறினால், உங்கள் எதிர் பார்ப்பை கொஞ்சம் தள்ளி வைத்து அடுத்தவர் களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முயன்றால் உறவுகளை நீஙகள் தேடிப்போக வேண்டிய தில்லை.
உறவுகள் உங்களை நாடி ஓடி வரும்….!
ஆழ்ந்த நம்பிக்கை அதிசய ஆற்றல்
உங்கள் வாழ்க்கையில் நீங்களே அதிசயிக்கத்தக்க மாற்றங்களை உருவாக்கிக் கொள்ள முடியும். மிக மோசமான நிதி நிலையை மாற்றி செல்வந்தனாக மாறிவிடமுடியும். நோயாüயாக இருந்தால் முழு ஆரோக்கியத்தை அடைந்துவிட முடியும். சராசரி மனிதராக இருத்தாலும் புகழ்மிக்க மதிப்புமிக்க மனிதராக மாறிவிட முடியும்.
அதற்கு யார் உதவியைப் பெறவேண்டும்? எவருடைய ஒத்துழைப்பைப் பெற வேண்டும்? எவரும் உதவத் தேவையில்லை; உதவவும் முடியாது.
நீங்கள்தான் அதை வெற்றிகரமாகச் செய்து முடிக்க வேண்டும். அதைச் செய்து முடிக்கும் தகுதி உங்களுக்கு மட்டுமே உண்டு.
முடியாது, இயலாது, நடக்காது, ஆகாது, கிடைக்காது என்னும் எண்ணங்களை மாற்றி அமைக்கும் போது நம்பிக்கை பலப்படுகிறது. நம்பிக்கை எண்ணங்களைத் தொடர்ந்து பதித்துக் கொண்டே வந்தால் அது ஆழ்ந்த நம்பிக்கை ஆகிவிடுகிறது. ஆழ்ந்த நம்பிக்கை அதிசய ஆற்றலாகச் செயல்பட்டு, நாம் எது நடக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ அது நிறைவேறுவதற்குத் தேவையான சம்பவங்களை உருவாக்குகிறது.
ஒரு நம்பிக்கை, அவநம்பிக்கையின் தலையீடு இன்றி, தொடர்ந்து பதிக்கப்படும் போது, நாளடைவில் அது ஆழ்ந்த நம்பிக்கை என்னும் விசுவாசமாக மாறிவிடுகிறது.
உலக வரலாற்றை கவனமாகப் புரட்டினால் ஏழையர் பலர் கோடீஸ்வரர்களாக உயர்ந்ததையும், குறைந்த பள்üப் படிப்பே உடையவர்கள் மேதைகளாக உயர்ந்ததையும், அவமானங்களையே சந்தித்துக் கொண்டிருந்தவர்கள் புகழ் பெற்றவர் களாக மாறியதையும், மிகச் சாதாரணமான தொழிலைச் செய்து கொண்டிருந்தவர்கள் மிக உயர்ந்த பதவிகளைப் பெற்றமைக்கும் ஆயிரக் கணக்கான சான்றுகள் கிடைக்கும்.
அவர்கள் அவ்வாறு சாதிக்கத் துணையாக இருந்தது எது? அவர்களுக்குள் ஏற்பட்ட ஆழ்மனப் பதிவுகள்தான் அதிசய ஆற்றலை வெüயில் கொண்டு வந்தன. வெüப்பட்ட அதிசய ஆற்றல் அவர்களுக்கு எதிராக, பாதமாக, விரோதமாக இருந்த புறச்சூழ்நிலைகளை ஆதரவாக, சாதகமாக, உதவியாக மாற்றியமைத்தது.
அவர்களுடைய உடல் வலிமையோ, செல்வாக்கோ, கிடைத்த சிபாரிசுகளோ அவர்
களுடைய வெற்றிக்குக் காரணமல்ல. ஆழ்ந்த நம்பிக்கைதான் அதிசய ஆற்றலை உருவாக்கிக் கொடுத்தது.
அவர்கள் பயன்படுத்திய அதிசய ஆற்றலை நாமும் வளர்க்க முடியும், வெüக்கொணர முடியும் உலகம் வியக்கும் பெருமை மிக்க சாதனைகளைச் செய்ய முடியும்.
ஆனால், நம்மில் பலர் ஏன் சோர்ந்து போய் இருக்கிறோம்? கடந்த கால கஷ்ட, நஷ்டங்கள், தோல்விகளையே மீண்டும் மீண்டும் திரும்பிப் பார்க்கிறீர்களா? நிகழ்காலத்தில் சூழ்நிலை எவ்விதத்திலும் சாதகமாக இல்லையே என்று திகைத்துப் போயிருக்கிறீர்களா? இந்த இரண்டு செயல்கள்தான் நம்பிக்கை, ஆழ்ந்த நம்பிக்கை ஆவதைத் தடுக்கின்றன.
இந்த நொடியிலிருந்தே நீங்கள் கடந்த காலக் காட்சிகளை நினைவுக்குக் கொண்டு வருவதை நிறுத்திவிட வேண்டும். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். நடப்பவை நல்லவையே என்று உறுதியாக எண்ணுங்கள். நிகழ்காலச் சூழ்நிலை அப்படி நம்புவதற்கு எதிராக இருக்குமானால் நிகழ்காலத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் கழித்து விடுங்கள்.
ஆதாரமோ, அறிகுறியோ அடையாளமோ இல்லாத நிலையிலும், நீங்கள் விரும்புவது எதிர்காலத்தில் நிறைவேறியே தீரும் என்று அடிக்கடி எண்ணுங்கள். அந்த எண்ணம்தான் நம்பிக்கையாகி, ஆழ்ந்த நம்பிக்கையாகி அதிசய ஆற்றலை வெüக்கொணர்கிறது.
“ஆழ்ந்த நம்பிக்கை” என்னும் விசுவாசம் உங்கள் உள்ளத்தில் வேர் கொள்ள வேண்டும் என்றால் நீங்கள் ஆக்கமனப்பான்மையுடன் உங்கள் முயற்சிகளை ஒரு குறிக்கோளை நோக்கித் திருப்பிவிட வேண்டும்.
அப்படியானால், பத்து ஆண்டுகüல் சாதிக்கத் தகுந்த ஒரு குறிக்கோளை நீங்கள் நிர்ணயித்திருக்க வேண்டும். நிர்ணயிக்காவிடில் ஆழ்ந்த நம்பிக்கை பற்றி அறிந்து கொள்வதோ, இது போன்ற பல கட்டுரைகளைப் படிப்பதோ, உங்களுக்குப் பயன் எதையும் தாராது.
“நடந்தே தீரும் நடந்தே தீரும்” என்று உணர்ச்சியுடன் சொல்லச் சொல்ல உங்கள் உள்ளத்தில் நம்பிக்கை பெருகும். மேலும் மேலும் நம்பிக்கை பதிக்கப்படும்போது அது விசுவாசமாக மாறிவிடும்.
விசுவாசம் தானாகவே நீங்கள் விரும்புவதை உங்களுக்குப் பெற்றுத் தந்துவிடாது. ஆனால், அதை அடையக் கூடிய வழியை உங்களுக்குத் தெüவாகக் காட்டும். விசுவாசம் காட்டும் வழியில் சென்று, நீங்கள் அதனை எடுத்துக் கொள்ளலாம்.
விசுவாசத்தை ஒரு அடிப்படையை வைத்துத் தான் நிலைநிறுத்த முடியும். அப்படி விசுவாசத்தை நிலை நிறுத்தாவிடில் அந்த இடத்தை பயம் ஆக்கிரமிக்கும். அப்படி ஆகிவிட்டால், இப்படி ஆகிவிட்டால் என்று எண்ணுகிற பயத்திற்கு இடம் கொடுத்தால் நாம் சூழ்நிலையின் கைதியாக மாறி விட நேரும்.
நீங்கள் விசுவாசத்தை வளர்த்து வெற்றி காண வேண்டும் என்றால் ‘முடியாது’ என்னும் சொல்லை அர்த்தமற்றதாக எண்ண வேண்டும். அப்படி எண்ணி வளர்க்கப்பட்ட விசுவாசம்தான் மிகப் பெரும் அதிசயங்களையும், அற்புதங்களையும் நிகழ்த்தியுள்ளது.
முடியாது என்பதற்கு ஆதாரமான காரணங் களை ஏன் தேடுகிறீர்கள்? முடியும் என்று நினைத்துக்கொண்டு ஆதாரங்களைத் தேடுங்கள் நூற்றுக் கணக்கில் கிடைக்கும்.
விசுவாசம் என்னும் ஆழ்ந்த நம்பிக்கை மாபெரும் சாதனைகளைப் படைத்திருக்கிறது. பல அற்புதங்களை நிகழ்த்தியிருக்கிறது. உங்கள் விசுவாசத்தை பலப்படுத்த உதவும் ஒரு வரலாற்று நிகழ்ச்சியை கவனமாகப் படியுங்கள். படிக்கும் போது உங்கள் குறிக்கோளையும், உங்கள் வாழ்க்கையையும் தொடர்புபடுத்திச் சிந்தியுங்கள்.
பிரான்சு நாடு பல ஆண்டுகளாக இங்கிலாந் துக்கு அடிமைப்பட்டுக் கிடந்தது. பிரான்சின் அரசன் பலமுறை படையெடுத்துப் போய் ஒவ்வொரு முறையும் தோல்வி அடைந்து சோர்ந்து போனான்.
தம் தாய்நாடு அடிமைப்பட்டுக் கிடந்தது குறித்து பலர் கவலைப்பட்டார்கள். அவர்கüல் ‘ஜோன்’ என்னும் ஏழைச் சிறுமியும் ஒருத்தி.
அவளோ, ஓர் ஏழைச் சிறுமி, ஆடு மேய்ப்பவள், எழுதப்படிக்கத் தெரியாதவள், உடல்வலிமை இல்லாதவள், வயதோ பன்னிரண்டு.
எந்தத் தகுதியும் இல்லாத ஜோன் தாய் நாட்டைக் குறித்துக் கவலைப்பட்டாள். நம் தாய்நாடு விடுதலை பெற வழியில்லையா? என ஏங்கினாள். எவரும் தாய்நாட்டை மீட்க மாட்டார்களா? என்று கவலையோடு சிந்தித்தாள்.
அரசனைச் சந்திப்பதற்குப் பலமுறை முயன்றாள். ஆனால், ஏழையான மெலிந்த அவள் தோற்றத்தைக் கண்டு காவலர்கள் அவளை விரட்டியடித்தனர்.
ஆனால், அரசனைக் காணும் முயற்சியை அவள் நிறுத்தவில்லை. ஐந்து ஆண்டுகள் இடைவிடாது முயன்ற பிறகே அவளால் அரசனைச் சந்திக்க முடிந்தது.
அவளுடைய ஏழ்மைக் கோலத்தைக் கண்ட அரசன் “என்ன வேண்டும் உனக்கு?” என்று கேட்டான். “என் பின்னால் ஒரு படையை அனுப்புங்கள். நான் நாட்டை மீட்டு வருகிறேன்!” என்று அவள் சொல்லக் கேட்ட அரசன் முதலில் சிரித்தான்.
ஆனால், அவள் குரலின் உறுதியும், கண்கüன் ஒüயும் அவனைச் சிந்திக்க வைத்தன. நூறு முறைக்கு மேல் தோற்றுப் போயிருக்கிறோம். இன்னொரு முறை தோற்பதனால் என்ன நேர்ந்து விடும்! என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.
படை வீரர்களை அணிவகுத்து நிறுத்தி, “ஜோன் என்னும் பெண் என்ன சொல்கிறாளோ அதன்படி செய்யுங்கள்” என்று கட்டளை இட்டான்.
இராணுவ உடைகளைக்கூட அணிந்து கொள்ளாத, ஆயுதங்களை ஏந்தத் தெரியாத, போர்ப் பயிற்சி இல்லாத, ஏழையான எழுதப் படிக்கத் தெரியாத, மெலிந்த உடலுக்குரிய, பதினேழு வயது ஜோன், படையை தலைமை தாங்கி நடத்திச் சென்று, எவராலும் தகர்க்கப்பட முடியாது என்று கருதப்பட்ட ஆர்லீன்ஸ் கோட்டையை தகர்த்து தாய்நாட்டை மீட்டாள்.
உலகமே அதிசயித்த அற்புதம் எப்படி நிகழ்ந்தது? ஜோனிடம் இருந்த அந்தத் தகுதி அவளுக்கு வெற்றிபெற்றே தீரவேண்டும் என்னும் குறிக்கோள். அதில் வெல்ல முடியும் என்னும் நம்பிக்கை. எப்படி வெற்றி கிடைக்கும் என்று தெரியாது. அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை, ஆனால் வெற்றி கிடைத்தே தீரும்! என்னும் விசுவாசம்.
ஜோனிடம் இருந்த திட்டவட்டமான குறிக்கோளும், வெல்ல முடியும் என்னும் நம்பிக்கையும், எப்படி என்று தெரியாது அதைப் பற்றிக் கவலை இல்லை. ஆனால் வெற்றி கிடைத்தே தீரும் என்னும் விசுவாசமும் உங்கüடமும் இருக்குமானால் நீங்களும் அற்புதமான சாதனைகளைப் படைத்துவிட முடியும்.
நன்கு கவனித்துப் பாருங்கள். ஜோனிடன் குறிப்பிட்டுச் சொல்லும்படி ஏதேனும் தகுதி இருந்ததா? குறைகளும், பலவீனங்களும் அவள் சொத்தாக இருந்தன, பின்னர் எப்படி அவளால் வெல்ல முடிந்தது.
கடந்த காலத் தோல்விகள் குறித்து அவள் சிந்திக்கவில்லை. நிகழ்காலச் சூழ்நிலை பாதமாக இருப்பதை அவள் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. எதிர்கால வெற்றியில் நம்பிக்கை வைப்பதற்கு அறிகுறியையோ, அடையாளத் தையோ, ஆதாரத்தையோ அவள் தேடவில்லை. ஆனால், தான் விரும்புவது நடந்தே தீரும் என்று நம்பினாள். அதுவும் ஆழமாக நம்பினாள். அந்த ஆழ்ந்த நம்பிக்கையே அதிசய ஆற்றலாக உருவெடுத்தது. சூழ்நிலையை அவளுக்குச் சாதகமாக மாற்றியது. அந்த மாபெரும் அற்புதம் தானே நிகழ்ந்தது.
வெற்றியின் இரகசியத்தை அறிந்துகொள்ள ஆர்வமா? அப்படியாயின் ஜோன் என்னும் வீராங்கனையோடு உங்களை ஒப்பிட்டுப் பாருங்கள்.
அவளைப் போன்று நீங்கள் சிறுவயதினரா? இல்லை. எழுதப்படிக்கத் தெரியாதவரா? இல்லை. அவள் அளவுக்கு ஏழையா? இல்லை. ஆடு மேய்ப்பவரா? இல்லை. உடல் வலிமை அற்றவரா? இல்லை. எல்லாற்றிலும் அவளைவிட நீங்கள் பன்மடங்கு மேலானவர்.
ஜோனைப் போன்று உங்கள் குறிக்கோளை, பத்து ஆண்டுகüல் அடைய வேண்டிய நிலையை திட்டமாக முடிவு செய்து விட்டீர்களா? அதை நிச்சயம் அடைய முடியும் என்று நம்புகிறீர்களா? எப்படி என்று தெரியாது! அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை! ஆனால் நான் வைத்துள்ள காலவரையில் அது நிறைவேறியே தீரும் என்று ஆழமாக நம்புகிறீர்களா? உங்களாலும் ஜோனைப் போன்று அற்புதச் சாதனை நிகழ்த்த முடியும்.
“நம்பிக்கை” என்பது மந்திர சக்தி, ஆனால் “விசுவாசம்” என்னும் ஆழ்ந்த நம்பிக்கை அதிசய ஆற்றல்.
“நடந்தே தீரும், நடந்தே தீரும்” என்று ஆட்டோசஜசன் செய்யுங்கள். உங்கüடம் மந்திரசக்தி பெருகும்.
“எப்படி என்று தெரியாது! அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை ஆனால் என் குறிக்கோள் நிறைவேறியே தீரும்” என்று திரும்பத் திரும்ப சொல்லுங்கள். உங்கüடம் அதிசய ஆற்றல் பெருகும்.
மந்திர சக்தியும், அதிசய ஆற்றலும் உங்களுக்குள்ள பிரச்சினைகளை, தடைகளை எதிர்ப்புகளை முறியடித்து, வழியையும் முறையையும் கற்றுக்கொடுத்து, திட்டம், மூலதானம் உதவி, ஒத்துழைப்பை உருவாக்கிக் கொடுத்து அறிவு, திறமையை வலுவாக்கி நீங்கள் நம்பியபடியே, திட்டமிட்டப்படியே வெற்றி தேடித் தரப் போகின்றன.
ஆகவே,
ஆழ்ந்த நம்பிக்கையே அதிசய ஆற்றல்.
இதுதான் வெற்றியின் ஐந்தாவது இரகசியம்!
ஓஷோ
“தத்துவங்கள்” என்றாலே, அவை தளர்ந்து போனவர்களுக்குத்தான் என்கிற தவறான கருத்தைத் தகர்த்து, வாழ்வியலின் வலிமையே தத்துவம் என்கிற புதிய பார்வையோடு எதையும் அணுகியவர். கண்டறியாதன காண்பதிலும், காட்டுவிக்கப்படாததைக் காட்டுவதிலும் நிகரற்று விளங்குகிறார் ஒஷோ.
ஆன்ம விடுதலை நோக்கியே அவரது வழிகாட்டுதல்கள் இருந்தாலும், நடைமுறை வாழ்வின் வெற்றிக்கும் ஓஷோவின் சிந்தனைகள் ஒளிபாய்ச்சக் கூடியவை.
கடந்த நூற்றாண்டின் மிகச்சரியான மனித ராகவும், மிகத் தவறாகப் புரிந்து கொள்ளப் படுபவராகவும் ஓஷோ விளங்கியதுதான் ஆச்சரியம்!
பாலியல் சார்ந்த கருத்துக்களில் அவரது, பார்வையை, தவறாகப் பொருள் கொண்டவர்கள் ஓஷோவை “செக்ஸ் சாமியார்” என்றார்கள்.
ஒருமுறை ஓஷோவிடம் ஒருவர் கேட்டார், “உங்கள் ஆசிரமத்தில் நீங்கள் ஒழுக்கத்தை போதிப்பதில்லையே? ஏன்?” என்று.
ஒஷோ சொன்னார், “பார்வை இழந்தவர் களுக்கு நான் கண்களைத் தருகிறேன். நீங்கள், ஏன் ஊன்றுகோல் தரவில்லை என்று கேட்கிறீர்கள்” என்று.
அறியாமை, ஆசை, கோபம், காமம் போன்றவை பார்வையை மறைத்திருக்கின்றன. “விழிப்புணர்வு” என்கிற வெளிச்சத்தைப் பாய்ச்சி விட்டாலே போதும், ஊன்றுகோல் எதற்கு? என்கிறார் ஓஷோ.
தன்னைப் பற்றிய புரிதலும், விழிப்புணர்வும் உள்ளவர்களுக்கு ஒழுக்கம் சார்ந்த போதனைகள் தேவையில்லை. ஏனெனில், விழிப்புணர்வு பெற்ற மனிதன் தன்னைத் தானே பார்த்துக் கொள்கிறான்.
ஒன்றை உறுதியாக நம்புவோம் எனில் நன்மை நடக்கும் என்பதை, சுயமுன்னேற்றச் சிந்தனையாளர்கள் பல்வேறு கோணங்களில் பேசி வருகிறார்கள். ஓஷோ இதனை மிக அழகான கதையின் மூலம் விளக்குகிறார்.
ஒரு போலிச்சாமியார் இருந்தார். அவரிடம், உண்மையான தேடலுள்ள சீடன் ஒருவன் வந்தான். “சுவாமி எனக்கு மந்திர உபதேசம் செய்யுங்கள்” என்று கேட்டான். “என் பெயர்தான் மந்திரம் அதனை உளமார உச்சரித்தாலே நன்மைகள் நடைபெறும்” என்றார் சாமியார்.
கொஞ்சநாள் கழித்து நதிக்கரை பக்கமாகப் போனார் சாமியார். அங்கே ஒரே கூட்டம், ஒருவர் வந்து “சுவாமி உங்கள் சீடன் தண்ணீர் மீது நடக்கிறான்”, என்றார். ஓடிப்போய் பார்த்தார் சாமியார்.
சமீபத்தில் வந்த அதே சீடன் தான்! இவருக்கு ஆச்சரியம் தாங்க வில்லை. அவன் கரைக்கு வந்ததும் தனியாக அழைத்துப் போய், “அதன் ரகசியம் என்ன? எனக்குக் கற்றுத்தரக் கூடாதா?” என்றார் சாமியார்.
சீடன் சொன்னான், “உங்கள் பெயரை உச்சரித்துக் கொண்டே நடந்தேன் சுவாமி! வேறேதும் ரகசியமில்லை” என்றான். அதற்குள் கூடியிருந்தவர்கள், “சீடனுக்கே இவ்வளவு சக்தி என்றால், உங்களுக்கு எவ்வளவு சக்தியிருக்கும்! நீங்களும் நதியில் நடந்து செல்லுங்கள் சுவாமி” என்று வற்புறுத்தி இழுத்துச் சென்றார்கள். தண்ணீரில் நடக்க முயன்று “தொப்” என்று விழுந்தார் சாமியார்.
சீடனை அழைத்துச் சொன்னார், “ஐயா! நான் ஒரு போலி! இத்தனை காலம் ஊரை ஏமாற்றியிருந்தேன். நீ தண்ணீரில் நடக்கக் காரணம் நானல்ல! உன் நம்பிக்கை” என்றார்.
இதைச் சொல்லிவிட்டு ஓஷோ அடுத்தாற்போல் ஒன்றைத் தெளிவுபடுத்துகிறார். “ஒவ்வொரு மனிதனும் தன்னை முழுமையாக நம்பினால் புத்தனாய் மலர முடியும். மற்றவர்களை நம்புவது என்பது பழக்கத்தின் காரணமாகத்தான். உனக்கு உதவி நீதான்” என்கிறார்.
“வாழ்க்கை ஒரு கொண்டாட்டம்” என்று ஓஷோ சொன்னதன் உட்பொருள், மனிதன் சோகங்களுக்குள்ளும், குற்ற உணர்வு களுக்குள்ளும் அழுந்திவிடாமல், தன்னை உணர்ந்து, தன் இயல்பான தன்மையை மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டும் என்பதற் காகத்தான்.
குற்ற உணர்விலிருந்து விடுபட்டால் மட்டுமே மனிதன் மிகச் சிறந்த தன்மைக்கு உயர்வான் என்பதை ஓஷோ உணர்ந்திருந்தார். அதனை வெறும் போதனையாக மட்டும் சொல்லாமல், அதற்கான கருவிகளாய் தியானம், நடனம் போன்றவற்றை வழங்கினார்.
காமம், கடந்து போக வேண்டியதே தவிர புறக்கணிக்கக் கூடியது அல்ல என்ற ஓஷோவின் கருத்து பிறழ உணரப்பட்டது. எனவே அவரை வேறு விதமாய் சித்தரிக்கப் பலரும் முனைந்தனர்.
மனிதன், நிகழ்காலத்தின் நிமிஷமாக வாழவேண்டும் என்பதை “ஜென்” வாழ்க்கை முறை விரிவாகப் பேசுகிறது. “ஜென்” முறை பற்றி ஓஷோ நிறையப் பேசியிருக்கிறார்.
எந்த ஒரு தத்துவத்தையும் அவர் பரிந்துரை செய்ததில்லையே தவிர, விழிப்புணர்வு, நிகழ் காலத்தின் நிமிஷமாக இருத்தல், போன்றவைதான் அவர் காட்டிய முக்கியமான வழிமுறைகள் என்று சொல்லலாம்.
ஒவ்வொரு சின்ன விஷயத்திலிருந்து, பெரிய சாதனைகள் வரையிலான அனைத்திற்குமே நிகழ் காலத்தின் நிமிஷமாய் இருத்தல் பொருந்தி வரும். விநாடிகளின் கனம், அதன் முக்கியத்துவம், ஆழம் போன்றவற்றை அறிந்தவர்களால் வினாடிகளை வீணடிக்க இயலாது. அத்தகையவர்கள் வாழ்க்கையில் தோற்பதும் கிடையாது.
கவித்துவம் ததும்பத் ததும்ப, முற்றிலும் வித்தியாசமான கோணங்களிலிருந்து வாழ்வின் நுட்பங்களை ஓஷோ உணர்த்துவார்.
வெற்றி பெற விரும்புகிறவர்கள், முதலில் தன்னை முழுமையாக உணர்ந்து கொள்ள வேண்டும் என்பது காலங்காலமாய் வலி
யுறுத்தப்படும் கருத்துதான். அதன் காரணத்தை ஓஷோ விளக்குகிறார்.
“தன்னுடன் பொருந்திவாழ முடியாதவனால் பிறருடன் பொருந்தி வாழ முடியாது. தன்னை நேசிக்காதவனால் பிறரை நேசிக்க முடியாது. அத்தகைய மனிதர்கள் பிறரை ஏமாற்றுவதும் பிறரிடம் ஏமாறுவதும் தொடர்ந்து நடைபெறும். இன்று ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்கிறவை எல்லாம் முகமூடிகளே தவிர முகங்களல்ல. தன்னை முகமூடிகளுக்குப் பின்னால் ஒளித்துக் கொள்கிற மனிதர்கள் தங்கûளையே தொலைத்து விடுவார்கள்” என்று.
ஒஷோவின் தெளிவான பார்வை நமக்கு தெளிவைத் தரும் வாழ்வை முழுமையாக வாழும் உணர்வைத் தரும்.
Friday, January 29, 2010
Tamil Websites
விகடன்ஆனந்த விகடன் பத்திரிக்கை குழுமத்தின் தளம். குழுமத்தின் அனைத்து பத்திரிக்கைகளின் தற்போதைய இதழின் பக்கங்களை காணலாம்.
ஆசைதமிழ் மாணவர் / இளைஞர் சிற்றிதழ். தற்போது இணைய இதழாக .
ஆறாம் திணைமுதல் வலைபத்திரிக்கைகளில் (Netzine) முக்கியமானது. சென்னைத் தளம்.
அம்பலம்முதல் வலைபத்திரிக்கைகளில் ஒன்று. டிஷ்நெட் இணைய இணைப்பு நிறுவனத்தின் முதன்மை தமிழ் தளம். எழுத்தாளர் சுஜாதாவின் கேள்வி பதில்கள் உண்டு.
கல்கிகல்கி வார இதழின் தளம். டைனமிக் பாண்ட் (Dynamic Fonts) இல்லை, பக்கங்களை படிக்க தமிழ் பாண்ட்டை டவுன்லோட் செய்ய வேண்டும்.
தினமலர்தமிழ் செய்தித்தாளின் தளம். இன்றைய தாளின் முக்கியச் செய்திகளை காணலாம். தமிழ் பாண்ட்டை டவுன்லோடு செய்ய வேண்டும்.
தினகரன்தமிழ் நாளிதழின் தளம். இன்றைய தாளின் செய்திகளைக் காணலாம்.
தினமணிஇந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தமிழ் நாளிதழின் தளம்.
இணையம்தமிழ் செய்தித் தளம் மற்றும் தமிழ் தேடியந்திரம்.
வானவில்செய்திகள், நிகழ்வுகள், ஷாப்பிங், விவாதம், அரட்டை, பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த போர்ட்டல்